May 27, 2014

சென்னையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடுமுற்றுகைப் போராட்டம்!

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை ஆங்கிலவழி வகுப்புகளைத் தொடங்கி தமிழ்வழி வகுப்புகளுக்கு மூடுவிழா
நடத்திவரும் தமிழக அரசின் திட்டத்தைக் கண்டித்தும் அதனைக் கைவிடக் கோரியும் 20 அமைப்புகளைக் கொண்ட தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 28.05.2014 காலை 10.00 மணிக்கு சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இப்போராட்டம் குறித்த செய்திகளைத் தங்கள் இதழில் / தொலைக்காட்சியில் வெளியிட தங்கள் செய்தியாளரை புகைப்பட / காணொலிக் கலைஞருடன் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்களன்புள்ள,
பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்

No comments:

Post a Comment