April 22, 2014

மே தின நிகழ்வுகள் கூட்டமைப்பின் நகர சபை மைதான சாவகச்சேரியில்!

கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை சாவகச்சேரி நகர சபை மைதானத்தில் நடைபெறுமென தமிழரசுக் கட்சியின்
செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.

இம்முறை மே தின ஊர்வலம் புத்தூர்ச் சந்தியில் இருந்து ஆரம்பித்து சாவகச்சேரி நகர சபை மைதானம் வரையில் சென்று அங்கு மே தின நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டினில் கிளிநொச்சியினில் மட்டுமே கூட்டமைப்பின் கூட்டம் நடந்திருந்தது. 2012ம் ஆண்டினில் யாழ்.நகரினில் ஜ.தே.கவுடன் இணைந்து நடத்திய மேதினத்திலேயே சம்பந்தர் சிங்கக்கொடியை தூக்கிப்பிடித்த விவகாரம் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது தெரிந்ததே.

No comments:

Post a Comment