மல்லாகத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி
ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த
தவனேஸ்வரன் நிருபன் (வயது-30) நேற்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய
வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இவரை வாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த மேற்படி நபர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இதேவேளை மல்லாகம் பகுதியில் அதேதினத்தன்று இரவு முகத்தை துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டு வந்த குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்வத்தில் மூன்று இளைஞர்கள் காயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இவரை வாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த மேற்படி நபர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இதேவேளை மல்லாகம் பகுதியில் அதேதினத்தன்று இரவு முகத்தை துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டு வந்த குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்வத்தில் மூன்று இளைஞர்கள் காயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment