August 18, 2016

சங்குவேலியில் குடும்பஸ்தர் வீடு புகுந்து வெட்டிக்கொலை! - ரவுடி சன்னா அட்டகாசம் !

சங்குவேலியில் சன்னா என்ற பிரபல ரவுடி வீடு புகுந்து வெட்டியதில், குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 35) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரபல தாதா தனக்கும்குறித்த குடும்பஸ்தருக்கும் இடையில் இருந்த முன்பகையின் காரணமாக நேற்று இரவுவீடு புகுந்து வெட்டியுள்ளார்.

 
உறவினர்களினால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சன்னா யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும்பொலிஸ் மீதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபராவார். அவரைக் கைது செய்ய பொலிஸார்தேடுதல் நடத்திய போதும், வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று இரவு வீட்டிற்குள் புகுந்து குடும்பஸ்தரை வெட்டியுள்ளார்.

No comments:

Post a Comment