August 19, 2016

33 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 ஆம் திகதி ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.


இந்த 33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த உத்தியோகபூர்வமான அமர்வுகளோ விவாதங்களோ நடைபெறாவிடினும் இலங்கை தூதுக்குழுவினால் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கை ஆவணம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஏற்பாடுகள் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அத்துடன் 33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment