தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் தமிழர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக உடல்நல அமைச்சின் முன்னெடுப்பில் இப்போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
நியு யோர்க்கில், Forest Park இல் இடம்பெற்ற இப்போட்டிகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் மக்களோடு மக்களாக பங்கெடுத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
இதன் போது, சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
அத்துடன், தமிழீழத் தாயகத்தினை நினைவுருத்தும் வகையில் தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றன.
இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட வெற்றிக் கேடயங்களும், மடல்களும் வீரர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக உடல்நல அமைச்சின் முன்னெடுப்பில் இப்போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
நியு யோர்க்கில், Forest Park இல் இடம்பெற்ற இப்போட்டிகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் மக்களோடு மக்களாக பங்கெடுத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
இதன் போது, சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
அத்துடன், தமிழீழத் தாயகத்தினை நினைவுருத்தும் வகையில் தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றன.
இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட வெற்றிக் கேடயங்களும், மடல்களும் வீரர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment