July 6, 2016

நெடுங்கேணி மத்திய பேரூந்து நிலைய சுற்றுப் புறச்சூழல் சுகாதாரமற்ற நிலையில்!

மத்திய பேரூந்து நிலையத்தின் சுற்றுச் சூழல்கள் மது போதைக் கழிவுகளும் , குப்பைக்கழிவுகளும் காணப்படுவதனால் இதிலிருந்து பல  நோய்கள் உருவாவதற்கு வழி வகுக்கின்றது.


நெடுங்கேணி சுகாதார பரிசோதகரும் இவ்விடங்களை நேரே பார்வையிட்டு இது தொடர்பான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமெனவும்  தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசசபையினால் சுற்றுச்சூழல்கள் அகற்றப்பட்ட போதிலும் சில இடங்கள் அகற்றப்படாத நிலைக்கு காணப்படுகின்றது.

சிலமாவட்டங்களில் டெங்குநோய் அபாயம் ஏற்பட்டபோதிலும் இக்கழிவுகள் அங்கங்கு காணப்படுவதனால் இப் பகுதிகளிலும் டெங்குநோய் வருவதற்கான சூழல்கள் குப்பையாகவே காணப்படுகின்றது.

இதனை நெடுங்கேணி பிரதேசசபைச் செயலாளர் இப் பிரதேசங்களை பார்வையிட்டு இக் குப்பைகளை அகற்றி சுகாதாரமான பிரதேசமாக ஏற்படுத்தித் தரும்படி பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










No comments:

Post a Comment