July 7, 2016

தமிழ் அமைச்சர்கள் மூவர் இருந்தாலும் தொடரும் தமிழர்களின் துயரம்!

நாட்டின் அபிவிருத்திக்காக சேவையாற்றும் ஊழியர்களுக்கு அரசு பொருந்திய 2500 ரூபாய் சம்பள உயர்வானது எப்போது பெற்று கொடுக்கப்படும்? என்ற கேள்வியினை கூட்டு எதிர்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தண எழுப்பினார்.


இன்று நாடாளுமன்ற ஒன்று கூடலிலேயே இவ்வாறான கேள்வியை தினேஸ் குணவர்தன முன்வைத்தார்.

மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபாய் சம்பள உயர்வினை பெற்றுக் கொடுப்பதாக நல்லாட்சி அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. எனினும் இது வரையிலும் அதற்கான நடைமுறைகள் செயற்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன் செனவிரத்ண, நாட்டில் குறிப்பிட்ட பிரதேசங்களில் 2500 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டு விட்டது. தொடர்ந்தும் சம்பள உயர்விற்கான வேலைதிட்டங்களை அரசு முன்னெடுத்து கொண்டே வருவதாகவும், கூடிய விரைவில் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தினேஸ் குணவர்த்தன தமிழ்பேசும் மலையக மக்கள் விலைவாசியினால் தொடர்ந்தும் துயரப்பட்டு வருகின்றனர். மலையகத்தில் தமிழ் அமைச்சர்கள் மூவர் இருந்தாலும் மலையக மக்கள் தமிழில் உரையாடி தேவைகளை பெற்றுக் கொள்ள மட்டும் முடியவில்லை எனவும் கூறினார்.

அவரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பும், ஆமோதிப்பு கருத்துக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களால் கோஷமிடப்பட்ட நிலையில் சபாநாயகர் பாராளுமன்றத்தினை அமைதி படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தொடர்ந்து தினேஸ் குணவர்த்தன தமிழ்பேசும் மலையக மக்கள் விலைவாசியினால் தொடர்ந்தும் துயரப்பட்டு வருகின்றனர்.

தமிழ் அமைச்சர்கள் மூவர் இருந்தாலும் மலையக மக்கள் தமிழில் உரையாடி தேவைகளை பெற்றுக் கொள்ள மட்டும் முடியவில்லை எனவும் கூறினார்.

அவரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பும், ஆமோதிப்பும் பாராளுமன்ற உறுப்பினர்களால் கோஷமிடப்பட்ட நிலையில் சபாநாயகர் பாராளுமன்றத்தினை அமைதிப் படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment