June 1, 2016

மூதூரில் பெண் சிசுவின் சடலம் மீட்பு!

இலங்கை போக்குவரத்துச் சபையின் மூதூர் சாலைக்கு முன்னாலுள்ள களப்புப் பகுதியிலிருந்து, பெண் சிசுவொன்றின் சடலத்தை இன்று
மீட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். உரப்பையில் போடப்பட்டு, குறித்த சடலம் வீசப்பட்டிருந்தது எனவும், தமக்குக் கிடைத்த தகவலையடுத்து, அந்தச் சடலத்தை மீட்டுள்ளதாவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment