May 30, 2016

கனடாவின் அதிஉயர் கடேற் விருதைப் பெற்ற தமிழ் மாணவர்!

கனடாவின் அதி உயர் கடேற் விருது அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் இந்த விதை வழங்கி கெளரவித்தார். கனேடிய கடேற் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருதே, அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.

 
உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கடேற் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜையாவார்.

மணி டன்ஸ்டன் - மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment