May 30, 2016

போலியோ ஒழிப்புக்கு புலிகளும் பங்காற்றினர்! - ரணில் பாராட்டு !

இலங்கை முழுவதும் போலியோ ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக, தேசிய நோய்தடுப்பு தினமன்று நீங்கள் ஆயுதங்களை
கீழே வைப்பதற்கு தயாரானால் நாமும் ஆயுதங்களை கீழே வைத்து போர்நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு தயார் என புலிகள் கடிதம் மூலம் அறிவித்திருந்தனர், என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் நேற்று இடம்பெற்ற ரொட்டறி கிளப் மாநாட்டில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 
இலங்கையில் எமக்கு போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை. இரண்டு தசாப்பதத்திற்கு அதிக காலமாக எமது நாட்டில் போலியோ நோய் கண்டறியப்படவில்லை.

ஆயுதப்போராட்டத்தில் மூழ்கியிருந்த காலப்பகுதியிலே போலியோ நோயையும் இல்லாது ஒழித்தோம். ரொட்றிக்கழகத்தின் பங்களிப்பு காரணமாகவே போலியோவை கட்டப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம் எனவும் அதன் தலைவர் ரவீந்திரனிடமிருந்து மிக அதிகளவான அனுசரணைகள் கிடைக்கப் பெற்றதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment