May 23, 2016

பாதிப்புக்குள்ளான படகுகளை புனரமைக்க மன்னார் ஆயர் இல்லம் நிதியுதவி!

கடந்த வாரம் மன்­னாரில் நில­விய சீரற்ற கால­நி­லையால் மிகவும் பாதிப்­ப­டைந்த பேசாலை இழுவைப் படகு மீன­வர்­க­ளுக்கு
மன்னார் மறை­மா­வட்ட அப்­போஸ்­த­லிக்க பரி­பா­ல­கரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க மன்னார் ஆயர் இல்லம் பாதிப்­ப­டைந்த மீன­வர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பும் நோக்­குடன் பண உத­விகள் வழங்­கி­யுள்­ளது.

கடந்த வாரம் மன்­னாரில் நில­விய சீரற்ற கால­நிலை கார­ண­மாக மன்னார் மாவட்­டத்தில் அதுவும் பேசாலை பகுதி இழுவைப் படகு மீன­வர்கள் பெரும் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர்.

மன்னார் பகு­தியில் சீரற்ற கால­நிலை தாண்­ட­வ­மா­டி­ய­போது பேசாலை பகு­தி­யி­லுள்ள நூற்­றுக்கு மேற்­பட்ட இழு­வைப்­ப­ட­குகள் பேசாலை  பகு­தி­யி­லுள்ள கடலில் நங்­கூ­ர­மி­டப்­பட்டு இருந்­த­போது கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (15.05.2016) இரவு இப்­ப­கு­தியில் ஏற்­பட்ட மினி சூறா­வ­ளியின் கார­ண­மாக கடலில் நங்­கூ­ர­மி­டப்­பட்­டி­ருந்த இழுவைப் பட­குகள் ஒன்­றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் முப்­பது பட­குகள் சேதங்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­துடன் பதி­னேழு பட­குகள் கடலில் முற்­றாக மூழ்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதனால் இவ் பட­கு­களின் உரி­மை­யா­ளர்கள் மட்­டு­மல்ல இதன் தொழி­லா­ளி­களும் தங்கள் வாழ்­வா­தா­ரத்தில் மிகவும் வறுமை கோட்­டுக்கு தள்­ளப்­பட்­டதைத் தொடர்ந்து மன்னார் மறை­மா­வட்ட அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லகர் அதி­வண ஆயர் கிங்ஸ்லி சுவாம்­பிள்ளை ஆண்­ட­கையின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க மன்னார் ஆயர் இல்லம் பாதிப்­புக்­குள்­ளான பட­கு­களை உடன் புனர­மைப்­ப­தற்­கான பண உத­வி­களை வழங்­கி­யுள்­ளது.

பேசாலை மீனவ சங்க சிபா­ரி­சுடன் ஒவ்­வொரு படகின் பாதிப்­புக்­கேற்­ற­வாறு அவற்­றிற்­கான பணத்தை மன்னார் மறை­மா­வட்ட குரு முதல்வர் அருட்­பணி ஏ.விக்ரர் சோசை அடி­களார் பேசா­லைக்கு வருகை தந்து பேசாலை பங்குத் தந்தை அருட்­பணி அலெக்ஸ்­சாண்டர் பெனோ சில்வா அடி­களார் ஊடாக கடந்த வெள்ளிக் கிழமை (20.05.2016) நேர­டி­யாக மீன­வர்­க­ளுக்கு பணத்தை பகிர்ந்­த­ளித்­துள்ளார்.

பன்­னி­ரண்டு இலட்­சத்து தொண்­ணூறு ஆயிரம் ரூபா பணம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­ட­போதும் சிலர் குரு முதல்­வ­ரிடம் பெற்ற பணத்தைக் கொண்டு பட­கு­களை திருத்­தி­யபின் இதில் மிஞ்­சிய பணத்தை பங்கு தந்­தை­யிடம் வழங்கி தங்கள் நம்­பிக்கை தன்­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக பங்கு தந்தை அருட்­பணி அலெக்ஸ்­சாண்டர் பெனோ சில்வா தெரி­வித்தார்.

ஆயர் இல்­லத்தால் வழங்­கப்­பட்ட பணத்தில் மிகுதி பணம் காணப்­ப­டு­மாகில் இழு­வைப்­ப­டகு பாதிப்பால் தொழில் இன்றி தவிக்கும் மீனவ குடும்­பங்­க­ளுக்கு உதவிகள் வழங்கவும் ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும் பங்கு தந்தை தெரிவித்தார்.

இத்துடன் இக்காலகட்டத்தில் இப்பகுதியில் கடலில் உயிர்நீத்த மீனவர் ஒருவரின் குடும்பத்துக்கும் மன்னார் ஆயர் இல்லம் பண உதவி வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment