May 23, 2016

பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது இலங்கையில் இருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வெளியேறிய பெரும்திரளான ஈழத்தமிழர்கள், உணர்வுடன் கலந்து இலங்கை அரசுக்கெதிராக கோசங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,  இலங்கையில் நல்லாட்சி என்று சொல்லிக்கொள்ளும் அரசாங்கத்தின் காலத்திலும் தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும் , வெள்ளைவான் கடத்தலுக்கு எதிராகவும் , அபகரிக்கப்படும் தமிழர் தாயக நிலங்களை விடுவிக்க கோரியும், தற்போது இருக்கும் நாட்டின் குழப்பமான சூழ்நிலையில் புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களை திருப்ப அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தியும் பிரித்தானிய அரசாங்கம் இதற்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுக்குமாறும் கோரி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.




No comments:

Post a Comment