May 21, 2016

கிளிநொச்சியில் 29 பயனாளிகளுக்கு கால்நடைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில்  29 பயனாளிகளுக்கு கால்நடைகள் இன்று சனிக்கிழமை (21) வழங்கப்பட்டன.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பயனாளிகளுக்கு கால்நடைகளை வழங்கிவைத்தார்.
‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இக்கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன.
யுத்தத்தால் வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் போன்ற பயன்தரு இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால், வேலை வாய்ப்புக்கள் இல்லாது போயுள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment