August 23, 2015

பொறுப்புக்கூறலிலிருந்து அரசாங்கம் விலகிச்செல்ல முடியாது!சிறிதரன்!

பொறுப்புக்கூறல் என்ற விடயத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிச்செல்ல முடியாதென, யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வவுணதீவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சமூதாய விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கும் யுத்தக் கொடூரங்களுக்கும், ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சியோ அல்லது பிரதமர் ரணிலின் அரசாங்கமோ தங்களின் பொறுப்புக்கூறலை மிகத் தெளிவாக, சர்வதேச மேற்பார்வையோடு முன்வைக்கவேண்டிய காலம் மலர்ந்துள்ளது எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் தமிழர்கள் இந்த மண்ணில் தனித்துவமாக வாழ்வதற்கும், அவர்கள் சொந்த நிலத்தில் சுயாட்சியோடு, சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக்கொள்வதற்காகவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை ஒருபோதும் வீண்போகாதென அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment