August 9, 2015

கூட்டமைப்பு வேட்பாளர் சித்தார்தன் கரவெட்டிப் பகுதியில் பொதுமக்களால் துரத்தியடிக்கப்பட்டார் !

கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் நேற்று கரவெட்டிப் பகுதியில் வைத்து பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார்
.
கரவெட்டி கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளச் சென்ற போது அங்கு அதனை அறிந்து அங்கு திரண்ட மக்கள் இந்தப் பகுதிக்குள் எந்தக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் வரக் கூடாது எனத் தெரிவித்து  சித்தார்த்தன் உட்பட்டவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். 
எமது பிள்ளைகள் வந்துவிட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு எமக்காக பாடுபட்ட எங்கள் பிள்ளைகளுக்கே நாங்கள் வாக்குப் போடுவோம். எங்கள் பிள்ளைகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அவர்களுக்கு இடம் கொடுக்காது விரட்டியடித்த நீங்கள் இப்போது எந்த முகத்துடன் எங்களிடம் வருவீர்கள்  எங்களுக்கு இப்போ எல்லாம் விளங்கிவிட்டது.
தொடர்ந்து எம்மை பேய்காட்ட முற்படாதீர்கள். இங்கு இனியும் நிற்க வேண்டாம் என்று கூறி சித்தார்த்தன் உட்பட்ட குழுவினரை விரட்டி அடித்தனர் பொதுமக்கள்.

No comments:

Post a Comment