August 24, 2015

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் சிறுவர் இல்லங்களுக்கு திடீர் விஜயம் !

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் அங்குள்ள நிலமை தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

உருத்திரபுரத்தில் அமைந்துள்ள திருக்குடும்ப சிறுவர் இல்லம், காந்தி சிறுவர் இல்லம், ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சைவச் சிறுவர் இல்லம், திருவையாறில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம், கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கருணா நிலையம் ஆகிய சிறுவர் இல்லங்களுக்கே நீதவான் மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தருடன் விஜயம் செய்துள்ளார்.
இவ் விஜயத்தின் போது சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களுடன நீதவான் கலந்துரையாடியதுடன், அவர்களுடைய குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதன் போது நீதவானால் அவதானிக்கப்பட்டதும், சிறுவர்களால் முறையிடப்பட விடையங்களையும் உடனடியாக செய்து முடிக்கும்படி சிறுவர் நன்னடத்தை உத்தியோகஷஸ்தருக்கு உத்தரவிட்டிருந்தார்.

குறித்த சிறுவர் இல்லங்களில் கடந்த கால யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் தாய், தந்தையரை இழந்த ஆதரவற்ற சிறார்கள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக சிறுவர் இல்லங்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment