August 12, 2015

கொக்கட்டிச்சோலையில் த.தே.மக்கள் முன்னணியின் வேட்பாளர்களின் வீடுகள் மீது தாக்குதல்!

ட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில்போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகளின் மீது நேற்று இரவு இனந்தெரியாத
நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வேட்பாளர்களின் வீடுகள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் மெட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் பன்னீர்ச்செல்வம் மற்றும் வேட்பாளர் செல்வக்குமார் ஆகியோரின் வீடுகளின்மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தமது வீட்டின் முன்பாக இருந்த பதாகைகளை கிழித்தெறிந்துவிட்டு தம்மை தகாத வார்த்தை பிரயோகத்தினால் திட்டிவிட்டுச் சென்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் பன்னீர்ச்செல்வம் தெரிவித்தார்.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் வந்தோர் தம்வீட்டின் மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடாத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் செல்வக்குமார் தெரிவித்தார்.
தம்மீது தாக்குதல் நடாத்தவே அவர்கள் வந்ததாகவும் எனினும் தாம் வெளியில் வராததன் காரணமாக வீட்டின்மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், தனது பதாகைகளையும் கிழித்தெறிந்துவிட்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment