August 24, 2015

தமிழர்களின் பாரம்பரியத்தை கட்டிக்காக்க வேண்டும் கருக்காகுளம் வண்டில் சவாரி மைதானத்தில்; பா.டெனிஸ்வரன் (படங்கள் இணைப்பு)

கடந்த 22-08-2015 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கருக்காகுளம் வண்டில் சவாரி மைதானத்தில்
இடம்பெற்ற வண்டில் சவாரி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார், அன் நிகழ்வில் அவர் உரையாற்றுகையில் எமது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் இவாறான விளையாட்டுக்கள் எமது மண்ணில் இன்னமும் மறக்கப்படாமல் இருப்பதையும் அவற்றை ஒவ்வொரு ஆண்டும் நடாத்துவதும் பாராட்டத்தக்க விடயமாகும் எனவும், இதேபோன்ற அனைத்து கலைகளும் இன்னமும் அருகிவிடாமல் அவற்றை மென்மேலும் வளர்த்து நமது தமிழர்களின் பாரம்பரியத்தை கட்டிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
unnamed (15) unnamed (16) unnamed (17)

No comments:

Post a Comment