June 9, 2015

கோத்தபாயவின் வீட்டில் தடல்புடலாக பிறந்தநாள் கொண்டாடிய ராஜித!

அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது 65வது பிறந்ததினத்தை அண்மையில் விமர்சையாக கொண்டாடியுள்ளார். நீண்டநாளின் பின்னர் இம்முறைதான ராஜிதவின் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில்
குறிப்பிடத்தக்க விடயமென்னவெனில், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் வாசஸ்தலமான “ஸ்டன்மோர் கிரசன்ட்” இலேயே இந்த நிகழ்வு நடந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த இக்கொண்டாட்டத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விருந்து மிக தடல்புடலாக நடந்துள்ளது.
இந்த இல்லத்தில்த்தான் முன்னர் கோத்தபாய தங்கியிருந்தார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் ராஜித இங்கு குடியேறியிருக்கிறார். ஆட்சியை இழந்த பின்னர், இந்த இல்லத்தை தனக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த கோரியபோதும், மைத்திரி அதனை நிராகரித்து விட்டார்.

No comments:

Post a Comment