June 7, 2015

பெற்றுவளர்த்த தாயையே சீரழிக்க முயன்றவர் மஹிந்த: தயாசிறியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

மகிந்த ராஜபக்ச இப்படி நடந்து கொள்வார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. பெற்றதாயைப் போன்ற சுதந்திரக்கட்சியை சீரழிக்கும் முயற்சிகளில் அவர் இறங்குவது நல்லதல்ல. அவரது மேடைகளில் நான் இனிமேல் ஏறமாட்டேன். இப்படி அதிரடியாக
அறிவித்துள்ளார் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர. வடமேல் மாகாணசபை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சமயத்திலேயே இப்படி கூறினார்.
‘நான் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடனேயே இருக்கிறேன். நான் சுதந்திரக்கட்சிக்காரன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மேடைகளில் ஏறுவதில்லையென முடிவு செய்துள்ளேன்.
மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தமையினாலேயே அமைச்சராகினார், பிரதமராகினார், ஜனாதிபதியாகினார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் என்ற காரணத்தினாலே அவரால் இவ்வாறான பதவிகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.
சரியாக கூறினால், ஒரு அம்மா தன் பிள்ளையை பெற்று வளர்ப்பதனை போன்றது. ஒரு குழந்தையைப்போலவே மஹிந்த ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தார். அவரை கட்சி நன்றாக வளர்த்தது.
எனினும் தன் அம்மாவை கத்தியினால் குத்தும், சிரழிக்கும் ஒரு வேலையினை மஹிந்த ராஜபக்ச செய்வார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment