June 9, 2015

யாழ் பண்டத்தரிப்பில் மாடு மேய்க்கச் சென்ற சிறுமியை சீரழிக்க முயன்ற வாலிபன்!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் மாடு மேய்க்கச் சென்ற சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற வாலிபன் ஒருவனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது மல்லாகம் நீதிமன்றம்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த சிறுமி மாடுகளை சாய்த்தபடி காட்டுப்பகுதிக்கு தனிமையில் சென்றுள்ளார். சிறுமியை பின்தொடர்ந்து சென்ற 20 வயதான இந்த வாலிபன், மறைவான இடமொன்றில் வைத்து சிறுமியை கட்டிப்பிடித்து சீரழிக்க முயன்றுள்ளான். கத்திக்கூச்சலிட்ட சிறுமி, வாலிபனின் கையை கடித்துவிட்டு, தப்பியோடி வந்துவிட்டார்.
நடந்தவற்றை வீட்டில் தெரியப்படுத்தியதையடுத்து இளவாலை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அன்றையதினமே வாலிபன் கைதாகி, நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, நாளைவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment