June 9, 2015

மைத்திரியின் கீழ் போட்டியிட தயார்: விண்ணப்பம் அனுப்பினார் நாமல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கீழ் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தரப்பு எம்.பிக்கள் அனைவரும் விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளனரென சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தீபத்திற்கு தகவல் தந்துள்ளார். இதில் நாமல் ராஜபக்சவும் அடக்கம்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்குமாறு அண்மையில் கட்சி விடுத்த அறிவித்தலை தொடர்ந்தே இவர்கள் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். தனித்து போவதா அல்லது சுதந்திரக்கட்சியில் இணைந்திருப்பதா என்பதை இன்னும் தீர்மானிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மகிந்த தரப்பினர் அனைவரும் சுதந்திரக்கட்சியின் கீழ் போட்டியிட விண்ணப்பப்படிவங்களை அனுப்பியுள்ளனர்.
இதில் நாமல் ராஜபக்சவும் உள்ளடங்குகிறார். எனினும், மீண்டும் அரசியலில் குதிப்பதாக பாவனை காட்டிக் கொண்டிருக்கும் மகிந்த உள்ளடங்கவில்லை.
எவ்வாறாயினும் கட்சியின் வேட்பாளர் தெரிவுகுழுவே வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும். இந்த சமயத்தில் மகிந்த அணி உறுப்பினர்கள் பலர் களையெடுக்கப்படலாம் என தெரிகிறது.
அவ்வாறான சூழலில் அவர்கள் மகிந்த தலைமையில் களமிறங்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment