June 7, 2015

யுத்தம் நிறைவடைந்த பின்னரே வடக்கிற்கு போதைப் பொருட்கள் வந்தன - விக்னேஸ்வரன்!

2009ம் ஆண்டின் பின்னரே வடமாகாணத்தில் போதைப் பொருட்களின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 2009ம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் போதைப் பொருட்கள் பாவனையில் இருக்கவில்லை.

யுத்தம் நிறைவடைந்த பின்னரே இது வடக்கில் பரவியுள்ளது.

இதன் காரணமாகவே பல குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் வடமாகாணத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் குறித்து கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment