May 7, 2015

யாழ்.வளலாய் பகுதியில் நான்கு விமானக் குண்டுகள் மீட்பு ( படங்கள் இணைப்பு) !

யாழ்.வளலாய் பகுதியில் அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியிலிருந்து நான்கு விமானக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கடற்றொழிலுக்குச் செல்லும் வழியில் குண்டுகள் காணப்பட்டமை மக்களால் அடையாளப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் விடையம் தொடர்பாக படையினருக்கும் முறையிட்டிருந்தனர். இதனையடுத்து குறித்த குண்டுகள் நான்கும் படையினரால் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குண்டுகளில் 3 செயலிழந்துள்ளதாகவும் ஒன்று வெடிக்கும் நிலையில் இருந்த்தாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment