May 21, 2015

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா, எதிர்வரும் 23ம் தேதியன்று முதலமைச்சராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்பதற்கு தடை விதிக்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனுவில், ''ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் குளறுபடி உள்ளது.
சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.
மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment