May 21, 2015

காதல்மன்னன் அகப்பட்டார்! மோட்டார் சைக்கிள் தீக்கிரை!

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளரது மோட்டார் சைக்கிள் கடந்த திங்களன்று ஸ்கந்தபுரம் பகுதியினில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.முறையற்ற பாலியல் தொடர்பு தொடர்பினில் முன்னரும் குறித்த நபர்
எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் அவரது வாகனமும் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையினில் அதனை தாண்டி திங்கட்கிழமை இரவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்ட அன்று இரவு வேளையினில் குறித்த இடத்திற்கு சென்றிருந்த நிலையினில் கடுமையாக தாக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பினில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதை தமிழரசுக்கட்சி இளைஞரணி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலித்துவருவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த நபர் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது உறவினராகவும்,புகைப்படப்பிடிப்பாளராகவும் செயற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment