May 20, 2015

ஆசிரமத்தில் இருந்து இரவோடு இரவாக ஓட்டம் பிடித்த நித்யானந்தா!

வாரணாசி ஆசிரமத்தில் இருந்த சாமியார் நித்யானந்தாவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவுடன் சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தாவுக்கு பல்வேறு ஆன்மிகவாதிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் தொடர்ந்து எதிர்ப்புகள் காணப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், தனது ஆன்மிக நிகழ்ச்சிகளை உத்தரபிரதேசம் வாரணாசியில் 21 நாட்களுக்கு நடத்துவதற்கு அவரும், அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா வாரணாசிக்கு சென்றிருந்தார்.

ஆனால் சர்ச்சைக்குரிய நித்யானந்தாவுக்கு மிகவும் ஆடம்பரமாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை வாரணாசி மக்கள் ஏற்கவில்லை.

இதனால் மகளிர் அமைப்பினர், பனாரஸ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நித்யானந்தாவை வெளியேற்ற போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

வாரணாசியை விட்டு நித்யானந்தா உடனடியாக வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நித்யானாந்தாவை நான்கு தினங்களுக்குள் வெளியேற்றுவதாக மாவட்ட அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், தனது நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்த நித்யானந்தா, நேற்று இரவோடு இரவாக வாரணாசியை விட்டு ஓட்டம் பிடித்ததாக ஆசிரம நிர்வாக தரப்பினர் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment