May 20, 2015

வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் உட்பட 7 பேர் தீ வைத்து கொலை: மனைவி கைது!

மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை, சேடபட்டி அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த கண்ணன், முருகேஸ்வரி தம்பதியருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது.


திருமணத்திற்குப் பிறகு பணி நிமித்தமாக கண்ணன் சென்னைக்கு சென்று விட்டதால், தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி முருகேஸ்வரி கண்ணனை அழைத்து வந்துள்ளார்.

ஆனால், அதற்கு கண்ணன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், முருகேஸ்வரி மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று தனது பெற்றோருடன் கண்ணன் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் கதவுகளை வெளிப்பக்கமாக பூட்டிய முருகேஸ்வரி, வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இதில், வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த கண்ணன், அவரது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள், சகோதரி மகள் சுகந்தி (35), சங்கீதா (17), வினித் (13), சங்கீத் (12) ஆகியவர்களில் வினித் தவிர மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

படுகாயமடைந்த வினித் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார், மனைவி முருகேஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment