August 19, 2016

உலகின் உயரமான நத்தார் மரம் இலங்கையில்!

உலகில் அதியுயர்ந்த நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (18) காலை காலிமுகதிடலில் இடம்பெற்றது.


அர்ஜுன ரணதுங்க சமூக நலன் அமைப்பினால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்நிகழ்வு அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.

தற்சமயம் மெக்ஸிகோ நாட்டிலேயே உலகிலுள்ள மிக உயர்ந்த நத்தார் மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் உயரம் 295 அடிகளாகும். இவ்வுலகச் சாதனையினை முறியடித்து உலகிலுள்ள அதியுயர்ந்த நத்தார் மரத்தை காலிமுக திடலில் நிர்மாணிப்பதே அர்ஜுன ரணதுங்க சமூக நலன் அமைப்பின் பிரதான நோக்கமாகும்.

இந்நிர்மாணப் பணிகளின் பொருட்டு முதல் மண் வெட்டும் நிகழ்வு இன்று காலை 10.07 சுபவேளையிற்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கரங்களினால் முன்னெடுக்கப்பட்டது.

காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகிலுள்ள மிக உயர்ந்த நத்தார் மரத்தின் பொருட்டு பிரதான அனுசரணையாளர், இலங்கை துறைமுக அதிகார சபையின் பௌத்த சங்கமாகும்.

சமாதானம் மற்றும் சகவாழ்வினை பாதுகாத்தல் எனும் நோக்கில் அமைக்கப்படவுள்ள மிக உயரமான நத்தார் மரம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ம் திகதி திறந்துவைக்கப்படுமென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமூக நலன் மன்றம் தெரிவித்தது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் சமாதானம் மற்றும் சகவாழ்வினை பாதுகாக்கும் தேசத்தினை கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக தெரிவித்தார்.




No comments:

Post a Comment