May 21, 2015

கிளிநொச்சி இரணைமடு சந்தியில் வித்தியாவின் கொலையை கண்டித்து பேரணி!(படங்கள் இணைப்பு)

வடமாகாணத்தில் முழுமையாக வித்தியாவின் படுகொலையை கண்டித்து கண்டனப் பேரணிகள் கடையடைப்புக்கள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று கிளிநொச்சி இரணைமடு சந்தியில் இருந்து அப்பகுதி வர்த்தகர்கள் ஆட்டோ சங்கத்தினர் கிராம மக்கள் கண்டனப் பேரணியை நடத்தியுள்ளனர்.

இந்த கண்டனப் பேரணி இரணைமடுச் சந்தியில் ஆரம்பித்து கனகாம்பிகைகுளம் சிவன் கோவில் பகுதியில் நிறைவடைந்ததுடன், அங்கு மக்கள் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.
குற்றாவாளிகளை உடனடியாக நீதியின் முன்நிறுத்தி வழக்கை தாமத்தப்படுத்தாது உடன் தண்டனை வழங்கப்படவேண்டும்.
அத்துடன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது போன்ற வேண்டுகோள்களையும் பேரணியில் கலந்துகொண்டோர் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment