May 7, 2015

மகிந்தவின் கூலியாட்களே நிர்மலை தாக்கியது; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்து!

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் செயலாளர் பேராசியர் டாக்டர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி மீதான தாக்குதலை கண்டித்து இன்று கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

மனித உரிமை ஆர்வலர்களால் ஏற்பாடுசெய்திருந்த இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஊடக அமைப்புக்களைச் சேர்ந்த பலரும்  சிவில் சமூக அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
மகிந்தவின் கூலியட்களே தாக்குதலுக்கு காரணம் என இங்கு வலியுறுத்தப்பட்டது.
FB_IMG_1431014602134FB_IMG_1431014605668

No comments:

Post a Comment