May 5, 2015

தமிழீழத்தில் இனப்படுகொலை இடம்பெற்ற போது, தமிழகத்தில் திமுக வேடிக்கை பார்த்தது – அன்புமணி ராமதாஸ்!

சிறிலங்காவின் படையினர் தமிழீழத்தில் இனப்படுகொலைகளை புரிந்த போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக்கழகம் கைகளை கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராம்தாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறிலங்காவுக்கு எதிரான போராட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் நீர்த்துப் போக செய்தது.

தலைவர் பிரபாகரனின் தயார் சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட போது, அவருக்கும் கருணாநிதி அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கவில்லை.

இவ்வாறான செய்கையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழர் பிரச்சினையை காட்டிக் கொடுத்துள்ளது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment