May 5, 2015

சிறுபான்மையினரை இல்லாதொழிக்க மஹிந்த முயற்சித்தார்: ஊழல் புரிந்தவர்கள் சிலர் மட்டகளப்பில்: தகவல் வெளியிடுவேன்

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களை இல்லாதொழிக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வந்தாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் இணைந்து ஊழல் புரிந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இருக்கின்ஙறார்கள் அவர்கள் பற்றிய பட்டியலையும் விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment