May 7, 2015

நினைவு கூரலிற்கான உரிமை! யாழில் மே10 இல்!

நினைவு கூரலிற்கான உரிமை எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றிற்கு சிவில் சமூக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை) தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்
உரையாளர்களாக ருக்கி பெர்னான்டோ (மனித உரிமை செயற்பாட்டாளர்), பவானி பொன்சேகா (சட்டத்தரணி, சிரேஸ்ட ஆய்வாளார், மாற்றுக்கொளைக்களுக்கான நிலையம்), எழில் ராஜன் (வருகைதரு விரிவுரையாளார்-அரசியறிவியல் துறை- கிழக்கு பல்கலைக்கழகம், இணைப்பேச்சாளர்- தமிழ் சிவில் சமுக அமையம்) மற்றும் குமரவடிவேல் குருபரன் (சட்டத்தரணி. விரிவுரையாளர்- சட்டத்துறை- யாழ் பல்கலைக்கழகம், இணைப்பேச்சாளர்- தமிழ் சிவில் சமுக அமையம்) ஆகியோர் பங்கெடுக்கவுள்ளனர்.
எதிர்வரும் மே10 ம் திகதி யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் காலை 10.மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக சிவில் சமூக அமையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment