April 24, 2015

சாவகச்சேரி உதயா உணவகத்தினுள் புகுந்து ரவுடிக் கும்பல் வாள் வெட்டு - பலர் படுகாயம் !


சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உதயா உணவகத்தினுள் இன்று மாலை 6.30 மணியளவில் புகுந்த ரவுடிக்கும்பல் அங்கு நின்றவர்களை சமாரியாக வாளால் வெட்டியதில் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

ரவுடிக் கும்பல் வாள் வெட்டு நடாத்திக் கொண்டிருந்தபோது அங்கு பொலிசார் விரைந்து வரவே அவர்கள் ஓடியதாகவும் அவ்வாறு ஓடியவர்களில் 3 பேரை பொலிசார் கைது செய்ததுடன் 4 வாள்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த வாள் வெட்டுச் சம்பவத்திற்கான காரணங்கள் தெரியவரவில்லை.

No comments:

Post a Comment