April 22, 2015

மட்டக்களப்பு புன்னைக்குடா கடலோரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா கடலோரத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த
புன்னைக்குடாக் கடலோரத்தில் சுமார் 35 மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
ஸ்தலத்திற்கு விரைந்த குற்றங்களை கண்டறியும் விசேட சொகோ பொலிஸ்பிரிவின் மாவட்ட பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment