February 1, 2015

வலி.வடக்கினில் ஆமியின் நீச்சல்தடாகம்!

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய மக்கள் மீள்குடியமர்வு கனவிலிருக்க ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தினுள் நீச்சல் தடாகம் மற்றும் ‘கிளப்’ ஆகியன,
இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவினால் கடந்த வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்துக்கு கடந்த வியாழக்கிழமை வருகை தந்த இராணுவத் தளபதி தயாரத்னாயக்காவை, பிரபல வெள்ளை வான் கடத்தல்காரரான யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அல்விஸ் வரவேற்றிருந்தார். தல்செவன விடுதியில் புதிய நீச்சல் தடாகம் இராணுவத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அங்கு ‘கிளப்’ ஒன்றும் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டது.
முற்று முழுதாக படையினரது நிர்வாகத்தின் கீழுள்ள தல்செவன விடுதி தற்போது புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகம் திரும்பும் சிலரது மகிழ்விடமாகவுமுள்ளமை குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment