February 20, 2015

யோசித எவ்வாறு வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார் – ஜே.வி.பி!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ எவ்வாறு வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார் ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது.


யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார் என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

யோசிதவிற்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் n;தாடர்பில் குழுவொன்று அமைத்து விசாரணை நடத்தப்படும் என புதிய பாதுகாப்பு செயலாளர் வாக்குறுதி அளித்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் யோசித்தவிற்கு அதிகளவான சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு மூன்று மாதங்கள் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ள முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் இதுவரையில் குறித்த விசாரணைகள் இதுவைரயில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், மிகவும் மந்த கதியில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment