February 21, 2015

கே.பியை பாதுகாக்குமாறு ரணிலிடம் கோரினார் மகிந்த!

தேர்தல் தினத்தன்று மறுநாள் அதிகாலை, மகிந்தராஜபக்ஷ கே.பியை பாதுகாக்குமாறு கோரியதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி அதிகாலை 4 மணிக்கு பிரதமர் ரணில்விக்ரமசிங்க அலரிமாளிகையில் வைத்து மகிந்தராஜபக்ஷவை சந்தித்தார்.


இதன் போது தம்மையும், சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவையும், தமது குடும்பத்தாரையும் பாதுகாக்குமாறு மகிந்த கோரினார்.
அதேநேரம் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனையும் பாதுகாக்குமாறு அவர் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, சிறிலங்காவின் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment