February 1, 2015

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல்! 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில் அந்தப் பகுதியில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாமையி னால் தேர்தலை உடனடியாக நடத்தமுடியாமல் போனது.
இந்நிலையில் குறித்த தேர்தல் எதிர்வரு ம் 28ம் திகதி நடைபெறவிருக்கின்ற,
மேற்படி இரு சபைகளுக்குமான தேர்தல் 2011ம் ஆண்டும் பின்னர் 2012ம் ஆண்டும் நடத்தப்படுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தேர்தலை நடத்த வேண்டாம் என மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைபெறவுள்ளது.
குறித்த தேர்தலில் புதுக்குடியிருப்பு சபையில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 72 பேர் போட்டியிடவுள்ளனர்.
இதில் தமிழரசு கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளுடன் சேர்த்து 6 கட்சிகள் போட்டியிடவுள்ளன. இதில் 29 ஆயிரத்து 269பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கின்றனர்.
இதேபோன்று கரைத்துறைப்பற்று சபையில் 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 90 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த சபையிலும் 6 கட்சிகள் போட்டியிடவுள்ளதுடன், 23 ஆயிரத்து 489பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment