June 21, 2014

யாழ் பள்ளிவாசல் மீது தாக்குதல்!

இன்று  யாழ் கமால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காலை (21.06.2014) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
.

பள்ளிவாசலில் கண்ணாடி துண்டுகள் சிதறிய நிலையில் காணப்படுவதுடன் பொதுமக்களும் அவ்விடம் வந்த வண்ணம் உள்ளனர். சம்பவம் தொடர்பாக அவ்விடத்துக்கு வந்த சிறீலங்கா பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment