June 21, 2014

இஸ்லாமிய தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளிற்கு எதிர்ப்புத்தெரிவித்து கவனஈர்ப்புப் போராட்டம்!

தென்னிலங்கையில் இஸ்லாமிய தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளிற்கு எதிர்ப்புத்தெரிவித்து இஸ்காபரோ (Scarborough) நகரில் எதிர்வரும் 22 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Markham Road and Sheppard Avenue சந்திப்பில் பிற்பகல் 2.00 மணி முதல் 4:00 மணி வரை நடைபெற இருக்கும் கவனஈர்ப்புப் போராட்டத்திற்க்கு கனடியத் தமிழர் தேசிய அவை தனது முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

மதங்கள் கடந்து, மனிதநேயத்துடன், ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் அதேவேளை சிறிலங்கா இனவாத அரசின் திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை சர்வதேசத்திற்க்கு வெளிப்படுத்துமுகமாகவும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என கனடிய தமிழர் தேசிய அவை அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கின்றது.

மேலதிகதொடர்புகளுக்கு: கனடியத்தமிழர்தேசியஅவை
தொலைபேசி: 416-830-7703 | மின்னஞ்சல்: info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/canadianncct

No comments:

Post a Comment