June 24, 2014

பழ.நெடுமாறன் உட்பட 9 பேர் கைது !


மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட உலகத்தமிழர் பேரவை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், சட்டக்கல்லூரி மாணவி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மதுரை சட்டக்கல்லூரி மாணவியான சுகந்தி என்பவர் சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.

திங்கள்கிழமை தந்தை ஆனந்த் உள்ளிட்ட சிலருடன் சுகந்தி மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உலகத்தமிழர் பேரவை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறனும் வந்தார். இவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறினர். இதை ஏற்க மறுத்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பழ.நெடுமாறன், மாணவி சுகந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பழ.நெடுமாறன், மாணவி சுகந்தி உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இப்போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

No comments:

Post a Comment