September 2, 2016

மன்னார் அருவியாற்றில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள  நானாட்டன் மற்றும் முசலி பிரதேசங்களை பிரிக்கும்அருவியாற்று பாலத்திற்கு அருகில் உள்ள வெள்ள தடுப்பு மணலை சட்ட விரோதமான முறையில் கடற்படையினர் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில நபர்களும் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக  பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அருவியாற்று பகுதியினை அண்டியதாக  பல குடியீருப்புகள் கடந்ந வருடம் பெய்த கடும் மழையினை தொடர்ந்து ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்ததில் பல விடுகள் சொத்துக்கள் நீரில் முழ்கியது.

-இந்த நிலையில்  இவ்வாறான சட்டவிரோத மண் அழ்வினால் நானாட்டான் மற்றும் முசலி பிரதேசங்களிள் உள்ள   குடியீருப்புகள் எதிர்காலத்தில் நீரில் மூழ்கும் ஆபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாலத்தை பாதுகாக்க அருகில் கடற்படை முகாம் அமைக்க பெற்றுள்ள போதும்,அதில் பாதுகாப்பு கடமையில் இருக்கின்ற உத்தியோகத்தர்கள் குழுவினர்கள் தான் இப்படியான சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

இதே போன்று நானாட்டான் மற்றும் முசலி பகுதிகளில் சட்ட விரோதமான மண் அகழ்வுகள் தொடராக இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்ற போது இதனை தடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment