September 2, 2016

வட்டக்கச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு! - கொலையா என்று விசாரணை!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பெண் ஒருவர்சடலமாக மீட்கப்பட்டதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2 பிள்ளைகளின் தாயான 50 வயதுடைய சிறிஸ்கந்தராசா சந்திரபாரதி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், வட்டக்கச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



No comments:

Post a Comment