August 28, 2016

புலிகளுக்கு ஆயுதம் வழங்கி இந்திய படையினரை கொன்றது காங்கிரஸ்!

காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்த போது விடுதலைபுலிகளுக்கு ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் வழங்கியதாகவும் இந்திய இராணுவ படைத்தரப்பினரையும் வழங்கி புலிகளுக்கு உதவும் வகையில் செயற்பட்டிருந்தது என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளார்.


இந்திய ஊடகம் ஒன்றிலேயே குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும் வழங்கி அவர்களுக்கு உதவும் முகமாக காங்கிரஸ் இந்திய படைகளையும் இலங்கைக்கு அனுப்பியிருந்தது. அதனாலேயே சுமார் 1000 இந்திய அமைதி காக்கும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர் என அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

தீவிரவாதம் தொடர்பில் காங்கிரஸ் கட்சியானது மென்மையான போக்கினையும் அதே வேளை தேசியத்துவம், ஒற்றுமை தொடர்பில் கடும் போக்கினையுமே கடைபிடித்து வருகின்றது.

மற்றும் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் காங்கிரஸ் கட்சி போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ஆனால் அந்தக் கட்சியே தமது ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தது.

இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்துவது பற்றியோ சமூகத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது பற்றியோ காங்கிரஸ் கட்சி சிந்தித்ததில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசியலை மையப்படுத்தி பிரிவினை வாதத்தினை உருவாக்குவதிலேயே குறித்த கட்சி பெயர் பெற்றது. மேலும் பயங்கரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகள் மற்றும் இனவாதிகளுக்கு இக்கட்சி ஆதரவு வழங்கி வந்துள்ளது எனவும் அமைச்சர் வெங்கையா நாயிடு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment