August 30, 2016

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்பு போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை, ஐ.நா காணாமல் போனோர் தொடர்பில் நீதியான விசாரணையை நடத்து, நல்லாட்சி அரசே எமது பிள்ளைகளுக்கு பதில் கூறு, காணாமல் போனோர் அலுவலகம் ஒரு கண்துடைப்பு நாடகம்' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் சலோசலோஜன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் உற்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரனிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment