August 28, 2016

அல் கய்தா தீவிரவாதிகள் இலங்கையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ள முயற்சி?

அல் கய்தா தீவிரவாதிகள் இலங்கையில் தமது இயக்கத்திற்காக ஆட்களை சேர்க்க முயற்சிப்பதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தென் இந்தியா மற்றும் இலங்கையில் அல் கய்தா தீவிரவாதிகள் இளைஞர்களை தமது இயக்கத்தில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் அல் கய்தாவும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அல் கய்தா இயக்கம் தனது பிரச்சார நடவடிக்கைகளை தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் பிரசூரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் வீடியோக்கள், கட்டுரைகள், செய்திகள் போன்றவற்றை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய ஆட்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாகவும் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment