August 11, 2016

றியோ ஒலிம்பிக்கில் இன்று களமிறங்குகிறார் ஈழத்தமிழரான குத்துச்சண்டை வீரர் துளசி தர்மலிங்கம்!

றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் இன்று குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்கவுள்ளார். இவர், மங்கோலியரான CHINZORIG BAATARSUKH இற்கு எதிராக இன்று தனது முதலாவது போட்டியை சந்திக்கிறார்.
. தனது 18 ஆவது வயதில் ஜேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தர்மலிங்கம் கட்டார் நாட்டின் சார்பில் விளையாடுகிறார்.

 
பருத்தித்துறை- புலோலியைச் சேர்ந்த நளினி, தர்மலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி (மாறன்), கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கிறார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார்.

 உலகத்தரத்தில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழு முறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை ஜேர்மனி நாட்டின் சம்பியனாகவும் வந்திருக்கின்றார்.

கடந்த ஜூலை 7 ஆம் திகதி அன்று நடந்த Light Welterweight பிரிவில் மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில் ஆர்ஜென்ரினா நாட்டைச் சேர்ந்த Carlos Aquino என்ற வீரரை 3-0 என்ற புள்ளியில் வென்று றியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment